search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் வரத்து குறைந்தாலும் 73 அடியை தொட்ட பவானிசாகர் அணை
    X

    நீர் வரத்து குறைந்தாலும் 73 அடியை தொட்ட பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக உள்ள பவானிசாகர் அணை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்மட்டம் அதிகமாக உள்ளது.

    கடந்தாண்டு இதே நாளில் 39 அடியில் இருந்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக கூடி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

    இன்று (திங்கட்கிழமை) அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டது. அதே சமயம் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2316 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக வழக்கம் போல் பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்த மாதம் வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
    Next Story
    ×