search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
    X

    முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தொழில் பாதிப்பால் நகை செய்யும் தொழிலாளி மற்றும் அவரது மனைவி-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி சாலையில் வசித்து வந்தவர் குணசேகரன்(வயது50). நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி அமுதா(45). இவர்களுக்கு வித்யா(18) என்ற மகளும், விஜயன்(17), அரிகரன்(12) என்ற 2 மகன்களும் உள்ளனர். விஜயன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அரிகரன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

    குணசேகரன் வீட்டிலேயே பட்டறை அமைத்து ஆர்டரின் பேரிலும், நகைகள் செய்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் சமீபகாலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போதிய வருமானமின்றி அவர் அவதிப்பட்டு வந்ததோடு, மனமுடைந்து இருந்து வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம்போல் 4 பேரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை எழுந்த அரிகரன் அருகில் உள்ள அறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தனது தந்தை வாயில் நுரை தள்ளியவாறு பேச்சுமூச்சற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. அப்போது அதே அறையில் ஒரு மூலையில் தனது தாய் அமுதாவும், அக்காள் வித்யாவும் தூக்கு மாட்டி இறந்து கிடப்பது கண்டு அலறி துடித்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்து விட்டு உடனடியாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் 3 பேரின் உடல்களையும் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் நகை செய்யும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் குணசேகரன் நகை செய்யப்பயன்படும் சயனைடு தின்று நேற்று இரவு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனை கண்ட அவரது மனைவி மற்றும் மகள் அதிர்ச்சியில் அதே அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×