என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் பணம்-நகை கொள்ளை
Byமாலை மலர்18 Jun 2018 5:56 AM GMT (Updated: 18 Jun 2018 5:56 AM GMT)
பள்ளிப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:
பள்ளிப்பட்டை அடுத்த செங்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (57).
அ.தி.மு.க. சார்பில் முன்பு இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த எத்திராஜ், தற்போது ஆந்திராவில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். அடிக்கடி இங்கு வந்து செல்வார். இந்த வீட்டை இவருடைய மகள் தேவகி கவனித்து வருகிறார்.
நேற்று வீட்டை சுத்தப்படுத்திய தேவகி பின்னர் கதவை பூட்டி விட்டு தனது கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இந்த வீட்டின் கதவு இன்று திறந்து கிடந்தது.
இது பற்றிய தகவல் தேவகிக்கு தெரிய வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தார். அப்போது அவருடைய தந்தை எத்திராஜின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் திறந்து கிடந்தது.
அதில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்க பணம், 4 சவுரன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
பள்ளிப்பட்டை அடுத்த செங்காலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ் (57).
அ.தி.மு.க. சார்பில் முன்பு இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்த எத்திராஜ், தற்போது ஆந்திராவில் குளிர்பான கடை நடத்தி வருகிறார். அடிக்கடி இங்கு வந்து செல்வார். இந்த வீட்டை இவருடைய மகள் தேவகி கவனித்து வருகிறார்.
நேற்று வீட்டை சுத்தப்படுத்திய தேவகி பின்னர் கதவை பூட்டி விட்டு தனது கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இந்த வீட்டின் கதவு இன்று திறந்து கிடந்தது.
இது பற்றிய தகவல் தேவகிக்கு தெரிய வந்தது. உடனே அங்கு சென்று பார்த்தார். அப்போது அவருடைய தந்தை எத்திராஜின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் திறந்து கிடந்தது.
அதில் இருந்த ரூ.85 ஆயிரம் ரொக்க பணம், 4 சவுரன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X