search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
    X

    ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் பெருமக்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத், நூர் பள்ளிவாசல் ஹஜரத் முஸ்தபா ரம்ஜான் நோன்பின் மாண்புகள், இஸ்லாம் ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெருமகனார் நபி(ஸல்) ஆற்றிய பணிகள், ஈகையின் அவசியம் அன்பு சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.



    இதில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், முதன்மை நாட்டாண்மை முனவர் ஷெரீப், உலமாசபை மாவட்டத்தலைவர் முகம்மது முனீர், இப்ராகிம், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மருத்துவ அதிகாரி டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார், சாகுல்அமீது, வக்கீல் முகமது இல்யாஸ், அப்துல்லா உள்பட திரளாக முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவர்-சிறுமியர்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு (தூ-ஆ) நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளி வாசல், ஆகியவற்றில் ஈத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஜே.கே.மகால் வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில், லெப்பைக்குடிக்காடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 
    Next Story
    ×