search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து
    X

    நல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து

    நல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
    நல்லூர்:

    திருப்பூர்-காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பகுதியில் ஜெய்நகர் 4-வது வீதியில் உள்ள கணபதி அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் கந்தசாமி (வயது 40). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் நாச்சிபாளையத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டின் சமையல் அறையில் தீவிபத்து ஏற்பட்டு புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி கந்தசாமிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இது குறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். அதற்குள் அங்கு வந்த கந்தசாமி வீட்டை திறந்து உள்ளே சென்றுபார்த்த போது மிக்சியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு அங்கு இருந்த பொருட்கள் தீப்பிடித்தது தெரியவந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இதில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. 
    Next Story
    ×