என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே காதலிப்பதாக கூறி பிளஸ்-1 மாணவிக்கு தொல்லை: கல்லூரி மாணவர் கைது
Byமாலை மலர்17 Jun 2018 1:33 PM GMT (Updated: 17 Jun 2018 1:33 PM GMT)
காதலிப்பதாக கூறி பிளஸ்-1 மாணவிக்கு தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 18). பொள்ளாச்சியில் அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவர் அதேபகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் கிணத்துக்கடவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுத்து மற்றும் போலீசார்சார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் முத்துக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X