search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் சிலிக்கான் மணல் கடத்தல் - 3 பேர் கைது
    X

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் சிலிக்கான் மணல் கடத்தல் - 3 பேர் கைது

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரிகளில் சிலிக்கான் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி. சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு மற்றும் போலீசார் இன்று அதிகாலை ஊத்துக்கோட்டை 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற் கிடமாக வந்த 3 லாரிகளை நிறுத்தி விசாரித்தனர். லாரிகளில் சோதனை செய்தபோது, பீங்கான் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் சிலிக்கான் மணலை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து லாரியை ஓட்டி வந்த ஆந்திராவை சேர்ந்த சுப்பையா, நாகர் ஜூனா, ஜோதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து சென்னைக்கு சிலிக்கான் மணலை கடத்தி செல்வதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். மணல் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×