என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் தீ பிடித்ததால் புகை மூட்டம்
Byமாலை மலர்16 Jun 2018 5:33 PM GMT (Updated: 16 Jun 2018 5:36 PM GMT)
தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் புகை மூட்டத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான கிடங்கு தடங்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கிற்கு தர்மபுரி நகராட்சியின் பல்வேறு பகுதியில் சேரும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளில் பற்றி தீயால் உருவான கரும்புகை மூட்டம் தீ அணைக்கப்பட்ட பின்னரும் குப்பைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவதால் இந்த பகுதியில் காற்று மாசு அடைகிறது. இத்தகைய சமயங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
தர்மபுரி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான கிடங்கு தடங்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கிற்கு தர்மபுரி நகராட்சியின் பல்வேறு பகுதியில் சேரும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளில் பற்றி தீயால் உருவான கரும்புகை மூட்டம் தீ அணைக்கப்பட்ட பின்னரும் குப்பைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவதால் இந்த பகுதியில் காற்று மாசு அடைகிறது. இத்தகைய சமயங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X