search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் தீ பிடித்ததால் புகை மூட்டம்
    X

    தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் தீ பிடித்ததால் புகை மூட்டம்

    தர்மபுரி அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் புகை மூட்டத்தால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான கிடங்கு தடங்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கிற்கு தர்மபுரி நகராட்சியின் பல்வேறு பகுதியில் சேரும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குப்பை கிடங்கில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் திடீரென தீப்பிடித்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். குப்பைகளில் பற்றி தீயால் உருவான கரும்புகை மூட்டம் தீ அணைக்கப்பட்ட பின்னரும் குப்பைகளில் இருந்து தொடர்ந்து வெளியேறியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து கரும்புகை வெளியேறுவதால் இந்த பகுதியில் காற்று மாசு அடைகிறது. இத்தகைய சமயங்களில் சுவாச பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 
    Next Story
    ×