search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழப்பாடி அருகே மாணவி மாயம்
    X

    வாழப்பாடி அருகே மாணவி மாயம்

    வாழப்பாடி அருகே மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான மாணவியை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியை அடுத்த மாரியம்மன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி மாது (45). இவரது மனைவி விஜயா(39). குடும்பத்தோடு திருப்பூருக்கு சென்ற இத்தம்பதியர் அப்பகுதியிலேயே தங்கி நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அவர்களது 17 வயது மகள், 11ம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். சொந்த ஊருக்கு வந்த போது கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவி மாயமானர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மாயமான தனது மகளை மீட்டுக் கொடுக்கக்கோரி, தொழிலாளி மாது மனைவி விஜயா, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மாயமான மாணவியை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×