search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகாடு மலைபகுதியில் தென்மேற்கு பருவமழையால் எலுமிச்சை விலை வீழ்ச்சி
    X

    வடகாடு மலைபகுதியில் தென்மேற்கு பருவமழையால் எலுமிச்சை விலை வீழ்ச்சி

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    சத்திரப்பட்டி:

    திண்டுக்கல் அருகே வடகாடு, வண்டிப்பாதை, கண்ணணூர், பால்கடை, புலிக்குத்திக்காடு, பெத்தேல் புரம், சிறுவாட்டுக்காடு உள்பட 14 மலை கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் எலுமிச்சை நடவு செய்துள்ளனர். 

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வடகாடு மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.60 முதல் ரூ.70 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் மொத்த விபாயாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் ஒருகிலோ எலுமிச்சை ரூ.40 முதல் ரூ.50 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.

    Next Story
    ×