என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடி அருகே மணல் கடத்திய லாரிகள்- டிராக்டர் பறிமுதல்
மேலசொக்கநாதபுரம்:
போடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சில இடங்களில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மட்டும் தங்கள் நிலங்களுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை பயன்படுத்தி சிலர் மணல் கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் அவ்வப்போது இவர்களை கண்காணித்து அபராதம் விதித்தபோதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டே வருகிறது.
போடி அருகே பாலார்பட்டி கூழையனூர் பகுதியில் தாசில்தார் ஆர்த்தி, ராசிங்காபுரம் ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த 2 டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அனுமதி இல்லாமல் மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 2 லாரிகள் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனங்களை போடி தாசில்தார் அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மணல் கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்