search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் தொழிலாளி குத்திக்கொலை
    X

    ராமேசுவரத்தில் தொழிலாளி குத்திக்கொலை

    ராமேசுவரத்தில் மது குடிக்கும் தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் தெற்கு கரையூரைச் சேர்ந்தவர் பொன்னுத்துரை, கட்டிட தொழிலாளி. இவரது உறவினர் மகன் முனியாண்டி (வயது 35).

    திருப்புவனம் அருகே உள்ள கொத்தங்குளத்தைச் சேர்ந்த இவர், கட்டிட பணி செய்வதற்காக பொன்னுத்துரை வீட்டிக்கு வந்தார்.

    அவருடன் சிவமணி, அஜித், இருளக்கண்ணன், அய்யனார் ஆகியோரும் கடந்த 14-ந் தேதி ராமேசுவரம் வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு தெற்கு கரையூர் பகுதியில் சாலையோரம் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் முனியாண்டி பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ராமேசுவரம் துணை சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    முனியாண்டியின் உடலில் கத்திக்குத்து காயம் காணப்பட்டதால் அவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக சிவமணி உள்பட 4 பேரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×