search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணம்மாள்-கோவிந்தம்மாள்
    X
    கண்ணம்மாள்-கோவிந்தம்மாள்

    ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயும் மரணம்

    ஜோலார்பேட்டையில் மகள் இறந்த துக்கத்தில் தாயாரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. பீடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூ என்ற கோவிந்தம்மாள் (வயது 45). கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார்.

    அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இவர் சிகிச்சைக்காக வேலூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கோமா நிலைக்கு சென்றது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

    அவரது தாயார் கண்ணம்மாள் (70) அதே ஊரில் வசித்து வருகிறார். மகள் கோவிந்தம்மாள் இறந்த தகவலை கேள்விப்பட்டதும் கண்ணம்மாள் அதிர்ச்சியடைந்தார்.

    அந்த அதிர்ச்சியிலேயே அவரும் இறந்து விட்டார். இறந்த 2 பேரின் உடலும் நேற்று ஜோலார்பேட்டை அண்ணாநகர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். #Tamilnews
    Next Story
    ×