என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்15 Jun 2018 4:32 PM GMT (Updated: 15 Jun 2018 4:32 PM GMT)
சங்கரன்கோவிலில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமிபாண்டி மகன் சுரேஷ்பாபு (வயது28). இவர் தொழில் காரணமாக சங்கரன்கோவில் கீழ செக்கடி தெருவில் வீடு பார்த்து தனியாக வசித்து வந்தார். சுரேஷ்பாபுவின் தந்தை இறந்து விட்ட நிலையில் அவரது தாய் மற்றும் சகோதரி இருவரும் பனையூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சுரேஷ்பாபுவிற்கு அவரது குடும்பத்தினர் போன் செய்தும் எடுக்கவில்லை. மேலும் எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் சங்கரன் கோவிலுக்கு வந்து பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்து டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுரேஷ்பாபு வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ்பாபு தற்கொலை செய்ததற்கு காரணம் தெரியவில்லை. காதல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X