search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டறம்பள்ளியில் கார்-லாரி மோதி வியாபாரி பலி
    X

    நாட்டறம்பள்ளியில் கார்-லாரி மோதி வியாபாரி பலி

    நாட்டறம்பள்ளியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நாட்டறம்பள்ளி:

    ஆம்பூரை சேர்ந்த அப்துல் பாஷா மகன் ஜமீல்அகம்மது (வயது 27). தோல் வியாபாரி. இவர் இன்று காலை தொழில் சம்மந்தமாக ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர்பந்தல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் திடீரென பழுதானது. காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது, வாணியம்பாடியில் இருந்து ஓசூருக்கு சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் இருந்த ஜமீல் அகம்மது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×