என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெண்ணைநல்லூர் அருகே விபத்து- 2 அரசு பஸ்கள் மோதல்
Byமாலை மலர்15 Jun 2018 10:22 AM GMT (Updated: 15 Jun 2018 10:22 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2 அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
சென்னையில் இருந்து ஈரோடுக்கு நேற்று இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிந்தனாங்கூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது.
இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் 2 பஸ்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. #Tamilnews
சென்னையில் இருந்து ஈரோடுக்கு நேற்று இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிந்தனாங்கூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது.
இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் 2 பஸ்களும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X