search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் விபத்தில் சேதமடைந்த ஈரோடு அரசு விரைவு பஸ்.
    X
    பஸ் விபத்தில் சேதமடைந்த ஈரோடு அரசு விரைவு பஸ்.

    திருவெண்ணைநல்லூர் அருகே விபத்து- 2 அரசு பஸ்கள் மோதல்

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 2 அரசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    சென்னையில் இருந்து ஈரோடுக்கு நேற்று இரவு அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் இன்று காலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிந்தனாங்கூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது.

    இதில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் 2 பஸ்களும் சேதமடைந்தன.

    இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×