என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி
Byமாலை மலர்14 Jun 2018 4:57 PM GMT (Updated: 14 Jun 2018 4:57 PM GMT)
திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
திருச்சிற்றம்பலம்:
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்துக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.
அதன்படி கட்டுமான பணிகளுக்கு ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய போலீஸ் நிலையம் கட்டுவதற்கு செருவாவிடுதி தெற்கு வெள்ளிச்சந்தை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நேற்று போலீஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள், பூமி பூஜையுடன் தொடங்கின. இதற்கான நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன் (திருச்சிற்றம்பலம்), ராஜேந்திரன் (சேதுபாவாசத்திரம்), தியாகராஜன் (அதிராம்பட்டினம்), அன்பழகன் (பட்டுக்கோட்டை), ஜெயா (பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்துக்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது.
அதன்படி கட்டுமான பணிகளுக்கு ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய போலீஸ் நிலையம் கட்டுவதற்கு செருவாவிடுதி தெற்கு வெள்ளிச்சந்தை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நேற்று போலீஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள், பூமி பூஜையுடன் தொடங்கின. இதற்கான நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன் (திருச்சிற்றம்பலம்), ராஜேந்திரன் (சேதுபாவாசத்திரம்), தியாகராஜன் (அதிராம்பட்டினம்), அன்பழகன் (பட்டுக்கோட்டை), ஜெயா (பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X