search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி ரெயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    திருச்சி ரெயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

    ருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுகாதார துறை, எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
    திருச்சி:

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுகாதார துறை, எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் முதலாவது நடைமேடையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி கோட்ட முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் சவுந்திரராஜன் தலைமை தாங்கி கொடியசைத்து வைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் மதுரை- சென்னை சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அதிகாரிகள் வழங்கினர். ரெயில் மற்றும் ரெயில் நிலைய நடைமேடைகள், வளாகத்தை தூய்மையாக வைத்தல், குப்பைகளை குப்பை தொட்டிகளில் போடுதல் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

    நிகழ்ச்சியில் கூடுதல் முதன்மை மருத்துவ கண்காணிப் பாளர் பாஸ்கரன், உதவி நல அதிகாரிகள் சந்திரசேகரன், ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் கல்யாணசுந்தரம், சுதாகர், ரேவதி மற்றும் எக்ஸ்னோரா அமைப்பினர், பள்ளி மாணவ-மாணவிகள், பிரம்ம குமாரிகள் அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், ரெயில்வே துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்புரவு பணியாளர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக அறிவுறுத்தினர். 
    Next Story
    ×