என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செந்துறை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்14 Jun 2018 4:10 PM GMT (Updated: 14 Jun 2018 4:10 PM GMT)
செந்துறை அருகே கல்லூரி செல்ல விரும்பாத மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் வனஜா (வயது 18). இவர் சமீபத்தில் பிளஸ்-2 முடித்தார். இதனையடுத்து மகள் வனஜாவை முனியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி செய்தார்.
ஆனால் வனஜா தனக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனை முனியன் கண்டித்ததால் மனமுடைந்த வனஜா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வனஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மகள் வனஜா (வயது 18). இவர் சமீபத்தில் பிளஸ்-2 முடித்தார். இதனையடுத்து மகள் வனஜாவை முனியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி செய்தார்.
ஆனால் வனஜா தனக்கு கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என்று தந்தையிடம் கூறியுள்ளார். இதனை முனியன் கண்டித்ததால் மனமுடைந்த வனஜா சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வனஜா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X