என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டப்பட்டியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்14 Jun 2018 11:12 AM GMT (Updated: 14 Jun 2018 11:12 AM GMT)
ஒட்டப்பட்டியில் பெற்றோர் திட்டியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அலுமினியம் பேக்டரி நடத்தி வருகிறார்.
இவரது மகன் சிவபிரகாஷ்(வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., முதலாமாண்டு ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் மீண்டும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை ஆனந்தன் அவரிடம் கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை என்றால், கம்பெனியில் வந்து வேலைபார்க்குமாறு கூறினார். அதற்கு சிவபிரகாஷ் தனக்கு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தால் வேலைக்குவருவதாக கூறினார். அதனை நம்பிய ஆனந்தன் அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்தார்.
அதனை வாங்கி கொண்ட சிவபிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றி திரிந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் அவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்து கொண்டு திட்டியுள்ளார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளை திரும்பி கொடுக்குமாறு தந்தையிடம் சிவபிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சிவபிரகாஷை தந்தை ஆனந்தன் மீண்டும் திட்டியதாக தெரிகிறது. உடனே சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த சிவபிரகாஷின் பாட்டி வந்து அவரை சமாதானப்படுத்தி தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
தந்தை திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட சிவபிரகாஷ் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ரூமில் கதவை சாத்திக் கொண்டு தூக்குபோட்டு கொண்டார். அப்போது திடீரென்று சத்தம் கேட்டு எழுந்த அவரது பாட்டி சிவபிரகாஷ் இருந்த அறையின் கதவை தட்டினார்.
ஆனால் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் உடனே சிவபிரகாசின் பெற்றோரை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவபிரகாஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சிவபிரகாஷை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் வரும் வழியில் இறந்து விட்டார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அலுமினியம் பேக்டரி நடத்தி வருகிறார்.
இவரது மகன் சிவபிரகாஷ்(வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., முதலாமாண்டு ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் மீண்டும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை கண்ட அவரது தந்தை ஆனந்தன் அவரிடம் கல்லூரிக்கு செல்ல பிடிக்கவில்லை என்றால், கம்பெனியில் வந்து வேலைபார்க்குமாறு கூறினார். அதற்கு சிவபிரகாஷ் தனக்கு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தால் வேலைக்குவருவதாக கூறினார். அதனை நம்பிய ஆனந்தன் அவருக்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்தார்.
அதனை வாங்கி கொண்ட சிவபிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர்சுற்றி திரிந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் அவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்து கொண்டு திட்டியுள்ளார். நேற்று இரவு மோட்டார் சைக்கிளை திரும்பி கொடுக்குமாறு தந்தையிடம் சிவபிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சிவபிரகாஷை தந்தை ஆனந்தன் மீண்டும் திட்டியதாக தெரிகிறது. உடனே சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த சிவபிரகாஷின் பாட்டி வந்து அவரை சமாதானப்படுத்தி தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
தந்தை திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட சிவபிரகாஷ் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ரூமில் கதவை சாத்திக் கொண்டு தூக்குபோட்டு கொண்டார். அப்போது திடீரென்று சத்தம் கேட்டு எழுந்த அவரது பாட்டி சிவபிரகாஷ் இருந்த அறையின் கதவை தட்டினார்.
ஆனால் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் உடனே சிவபிரகாசின் பெற்றோரை வரவழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவபிரகாஷ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சிவபிரகாஷை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் வரும் வழியில் இறந்து விட்டார்.
இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X