search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    சீர்காழி அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி கொண்டல் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25) இவருடன் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் (45), கல்யாண சுந்தரம் (58), ரூபன் ராஜ்(25) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் கொண்டல் அண்ணா பஜார் என்ற இடத்தில் சென்றபோது சாலையோர மணலில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அறிவழகன் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். கல்யாண சுந்தரம், ரூபன்ராஜ் ஆகயோர் படுகாயம் அடைந்தனர். இதில் காயமின்றி தப்பிய பிரகாஷ் தலைமறைவாகி விட்டார்.

    இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான அறிவழகன் உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×