search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமுதி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கொள்ளை
    X

    கமுதி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கொள்ளை

    கமுதி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கமுதி:

    கமுதி அருகேயுள்ள அபிராமத்தில் வீரசோழம் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு சூப்பர்வைசராக மாரிமுத்து பணியாற்றி வருகிறார்.

    மேலும் 2 விற்பனையாளர்களும் உள்ளனர். வழக்கம் போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.

    நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம மனிதர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை கடையை திறக்க வந்த ஊழியர்கள், பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அபிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்களை திருடிச் சென்றவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×