search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
    X

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் பழுது மற்றும் தொழில்நுட்ப கோளாறால் 1200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது.

    இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாம் நிலை இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இரன்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரனமாக நேற்று 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இதனால் இரண்டாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையில் இரண்டு அலகிலும் 1200 மகாவாட் மின் உற்பத்தி நிறுத்தபட்டுள்ளது.

    முதல்நிலை மூன்று அலகில் மட்டும் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது.

    உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை மின் ஊழியர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews
    Next Story
    ×