search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1½ கோடி மோசடி- 3 பேர் கைது
    X

    திருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1½ கோடி மோசடி- 3 பேர் கைது

    திருத்தணி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1½ கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருத்தணியை அடுத்த கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன், ருக்மாங்கதன். இவர்கள் சென்னை திருமுல்லைவாயில் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தாமோதரனுடன் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர்.

    இவர்களிடம் கோரமங்கலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி ராஜூ உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர். முனுசாமி ராஜூ கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ. 3½ லட்சம் கட்டி இருந்தார்.

    ஏலச்சீட்டு முடிந்ததும் அவருக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோருக்கும் பணம் வழங்கவில்லை.

    ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முனுசாமி ராஜூ ஏலச்சீட்டு மோசடி குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் அனுமந்தன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 1½ கோடி வரை ஏலச்சீட்டு மோசடி நடந்து இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து ஏலச்சீட்டு நடத்திய தாமோதரன், ருக்மாங்கதன், வெங்கடராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    Next Story
    ×