search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது
    X

    திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலம் மூழ்கியது

    திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூரிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் கழிவு நீருடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள நல்லம்மாள் தடுப்பணை, ராயபுரம் தடுப்பணை, அணைக்காடு மண்ணரை தடுப்பணை, காசிபாளையம் தடுப்பணை ஆகிய தடுப்பணைகள் நிரம்பி வழிந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆனைமேடு, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப் பாளைத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இருபுறமும் பொதுமக்கள் நுழைந்து விடாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

    வருவாய்த்துறையினர் 24 மணிநேரமும் நொய்யல் ஆற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×