என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூரில் போலீசாரை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள் சாலை மறியல்
Byமாலை மலர்13 Jun 2018 2:04 PM GMT (Updated: 13 Jun 2018 2:04 PM GMT)
பெரம்பலூரில், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நகைக்கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
இதில், பெரம்பலூர் கடைவீதியில் நகைக்கடை நடத்தி வரும் கல்யாண் நகரை சேர்ந்த பாலையாவிடம் (50), குறைந்த தொகைக்கு திருடிய நகைகளை விற்பனை செய்ததாகக் கூறி, பெரம்பலூர் கடைவீதியில் உள்ள அவரது கடையை வெங்கடேசன் போலீசாருக்கு அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெரம்பலூர் போலீசார் நேற்று அதிகாலை பாலையாவின் வீட்டிற்கு சென்று அவரை விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள் சிலர், பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டதற்கு, முறையான பதில் அளிக்காமல், அவர்களை தகாத வார்த்தைகளால் போலீசார் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நகைக்கடை உரிமையாளர்கள், பெரம்பலூர் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பாலையாவை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கடைகளை அடைத்து தேரடி வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த நகைக்கடை உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கடைவீதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூரில் நேற்று போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நூற்றுக்கணக்கான நகைக்கடைகள் அடைக்கப்பட்டதால் கடை வீதி வெறிச்சோடி இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X