என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் தகராறு - ஓட்டல் ஊழியரை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்13 Jun 2018 11:27 AM GMT (Updated: 13 Jun 2018 11:27 AM GMT)
போடி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது21). பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த பிரதீப், கார்த்திக் மற்றும் மாயவேல் ஆகியோர் உணவு சாப்பிட வந்தனர். சாப்பிட்டு விட்டு அவர்களிடம் உணவுக்கான தொகையை ஊழியர்கள் கேட்டனர். ஆனால் 3 பேரும் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர்.
முகமது இஸ்மாயில் அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கினர். இது குறித்து போடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப் மற்றும் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X