என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணாடம் அருகே தீ விபத்து - 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
Byமாலை மலர்13 Jun 2018 10:32 AM GMT (Updated: 13 Jun 2018 10:32 AM GMT)
பெண்ணாடம் அருகே தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ராஜாவின் குடிசை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் சத்தம் போட்டு எழுப்பினர்.
சத்தம் கேட்டு எழுந்த ராஜா வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட் டில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொது மக்கள் உதவியுடன் ராஜா தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் தீயின் வேகம் மேலும் அதிகரித்து அருகில் இருந்த ராஜாவின் தாய் ஞானாம்பாளின் குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.
இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ராஜாவின் வீட்டில் உள்ள 20 ஆயிரம் பணம் மற்றும் 8 பவுன் நகை மற்றும் 2 வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவின் வீட்டில் மின்கிசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது45). விவசாயி. இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ராஜாவின் குடிசை வீட்டில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த ராஜாவையும் அவரது குடும்பத்தினரையும் சத்தம் போட்டு எழுப்பினர்.
சத்தம் கேட்டு எழுந்த ராஜா வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட் டில் இருந்து வெளியே வந்தனர்.
பின்னர் அந்த பகுதி பொது மக்கள் உதவியுடன் ராஜா தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
இதில் தீயின் வேகம் மேலும் அதிகரித்து அருகில் இருந்த ராஜாவின் தாய் ஞானாம்பாளின் குடிசை வீட்டிற்கும் தீ பரவியது.
இது குறித்து திட்டக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ராஜாவின் வீட்டில் உள்ள 20 ஆயிரம் பணம் மற்றும் 8 பவுன் நகை மற்றும் 2 வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவின் வீட்டில் மின்கிசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X