என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராரபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் கடந்த 10 வருடமாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் லதா என்கிற மகேஸ்வரி (24). என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் மகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த தேவராஜ் மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தேவராஜ்-மகேஸ்வரியின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். மேலும் அவர்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி விட்டு சென்றனர்.
பின்னர் காதல் ஜோடி திருப்பூரில் நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியேறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்