search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை
    X

    ராமநாதபுரத்தில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை

    ராமநாதபுரத்தில் கழுத்து அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுக் கிளி மகன் சிவா என்ற சிவக் குமார் (வயது 22).

    இவர் இன்று காலை அங்குள்ள கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி மகன் வைத்தீஸ்வரன் (20) மோட் டார் சைக்கிளில் வந்தார்.

    அவர், சிவாவுடன் வாக்குவாதம் செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமா இறந்தார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் கேணிக்கரை போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப் பற்றி விசாரணை நடத் தினர். கொலையான சிவாவும், வைத்தீஸ்வரனும் உறவினர்கள் தான். எனவே முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×