என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னை ரவுடி மரணம்: ஜெயில் அதிகாரிகளிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை
பொன்னேரி:
திருவொற்றியூர், பூங்கா புரத்தை சேர்ந்தவர் அடைக்கலராஜ், பிரபல ரவுடி. கடந்த 30-ந் தேதி பொன்னேரி பகுதியில் கொள்ளையில் ஈடுபட பதுங்கி இருந்ததாக போலீசார் அவரை கைது செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
நேற்று காலை சிறையில் இருந்த அடைக்கலராஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அடைக்கலராஜ் இறந்தார்.
அடைக்கலராஜின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி ருக்மணி சந்தேகம் எழுப்பி இருந்தார். இது தொடர்பாக பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அடைக்கல ராஜின் மரணம் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி மணி உத்தரவின் பேரில் பொன்னேரி மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். ஜெயில் அதிகாரிகள் மற்றும் அடைக்கலராஜின் உறவினர்கள், டாக்டரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.
பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் இன்று அடைக்கலராஜின் உடல் வீடியோ பதிவுடன் பிரேத விசாரணை செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்