search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் போராட்டம் எதிரொலி: காஞ்சீபுரத்தில் மதுக்கடை மூடப்பட்டது
    X

    பெண்கள் போராட்டம் எதிரொலி: காஞ்சீபுரத்தில் மதுக்கடை மூடப்பட்டது

    பெண்கள் போராட்டம் எதிரொலியால் காஞ்சீபுரத்தில் மதுக்கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களும், பொதுமக்களும் மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் அளித்தனர். மேலும் மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையினை அகற்ற மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிரடியாக உத்தரவிட்டார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பினால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கலெக்டர் பொன்னையாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×