search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக மன வேதனை அடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் நடேசன். தொழிலாளி. இவருடைய மனைவி ராணி (வயது 50). சம்பவத்தன்று ராணி, பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மன வேதனை அடைந்த ராணி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 
    Next Story
    ×