search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் தாய்- கல்லூரி மாணவி மாயம்
    X

    தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் தாய்- கல்லூரி மாணவி மாயம்

    தூத்துக்குடியில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரைண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் சந்தாணம். இவரது மனைவி மாலதி (வயது 24). இவர்களுக்கு ஆனந்தகுமார் (3) என்ற மகனும், இந்துமதி(2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சந்தாணம் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது மாலதியை காணவில்லை. மேலும் 2 குழந்தைகளும் மாயமாகியிருந்தனர். அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தாணம் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எங்கு சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி ஜார்ச் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் அபர்ணா (19). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8-ந் தேதி கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா என விசாரணை நடத்தி அபர்ணாவை தேடி வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×