search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்வேளூர் அருகே வாகனம் மோதி பெண் பலி
    X

    கீழ்வேளூர் அருகே வாகனம் மோதி பெண் பலி

    கீழ்வேளூர் அருகே வாகனம் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    திருவாரூர் மாவட்டம் பேரளம் வெள்ளித் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ராசாத்தி (வயது 55).

    சம்பவதன்று இவர் தனது மகள் அனிதாவை நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பொரவச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னிசன் பயிற்சி படிப்பதற்காக சேர்த்து விட்டு கல்லூரி வாசலில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்து அவரை பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×