search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எசனை பகுதியில் நாளை மின்தடை
    X

    எசனை பகுதியில் நாளை மின்தடை

    எசனை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொடர் மின் கழக பெரம்பலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறஉள்ளது. ஆகவே எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, பாலையூர், அனுக்கூர், சோமண்டாபுதூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. ஆகவே கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, சிறுநிலா, அன்னமங்கலம், அரசலூர், பெருநிலா, முகமதுபட்டிணம், தொண்டமாந்துறை, வெங்கலம், அரும்பாவூர், மலையாளப்பட்டி, பூலாம்பாடி, உடும்பியம், வெங்கனூர், வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், நூத்தப்பூர், கைகளத்தூர், காரியானூர், வெள்ளுவாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது, என்று வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×