என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலனை விட்டு பிரித்ததால் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 Jun 2018 3:28 AM GMT (Updated: 12 Jun 2018 3:28 AM GMT)
திருமணமானவருடன் ஓடிய இளம் பெண்ணை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காதலனை விட்டு பிரித்ததால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடையாறு:
மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜிகான். இவரது மகள் அனிதா (வயது 23). இவர் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான ராஜேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காதலன் ராஜேசுடன் அனிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் அந்த பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேசின் முதல் மனைவி அனுராதா மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வந்தனர்.
கடந்த 21-ந்தேதி அனிதாவுடன் அந்த பகுதியில் இருந்த ராஜேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருடன் இருந்த அனிதாவை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காதலனை விட்டு பிரித்து தன்னை வீட்டுக்கு அழைத்து வந்தது அனிதாவுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதனால் அவர் வீடு திரும்பியது முதல் மனமுடைந்து காணப்பட்டார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அனிதா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அனிதாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
மயிலாப்பூர் கபாலி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜிகான். இவரது மகள் அனிதா (வயது 23). இவர் அந்த பகுதியை சேர்ந்த திருமணமான ராஜேஷ் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது காதலன் ராஜேசுடன் அனிதா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் அந்த பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜேசின் முதல் மனைவி அனுராதா மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வந்தனர்.
கடந்த 21-ந்தேதி அனிதாவுடன் அந்த பகுதியில் இருந்த ராஜேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருடன் இருந்த அனிதாவை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காதலனை விட்டு பிரித்து தன்னை வீட்டுக்கு அழைத்து வந்தது அனிதாவுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதனால் அவர் வீடு திரும்பியது முதல் மனமுடைந்து காணப்பட்டார். இதில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அனிதா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அனிதாவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X