search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோதமாக  மதுவிற்ற 8 பேர் கைது
    X

    சட்டவிரோதமாக மதுவிற்ற 8 பேர் கைது

    திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைகளில் அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த 8 பேர் கைது.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி திருப்பூர் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகேயும், திருப்பூர் என்.ஆர்.கே.புரம் பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடைகளில் அருகில் வைத்து சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மது விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா(வயது 21), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நேதாஜி(46), புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த செழியன்(46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல திருப்பூர் மதுவிலக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் சந்தோஷ்குமார்(24), குமார்(34), சக்தி முருகன்(23), பழனிமுத்து(30), பத்மநாதன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 115 மதுபாட்டில் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×