என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனமழை எதிரொலி - பவானிசாகர் அணை ஒரே நாளில் 2 அடி உயர்வு
Byமாலை மலர்11 Jun 2018 8:51 AM GMT (Updated: 11 Jun 2018 8:51 AM GMT)
கனமழை மற்றும் பில்லூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
ஊட்டிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 3251 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதையொட்டி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் இன்று பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 55.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 57.46 அடியாக உயர்ந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வருவதையொட்டி அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் பாசனத்துக்கு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
ஊட்டிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 3251 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதையொட்டி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் இன்று பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 55.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 57.46 அடியாக உயர்ந்து உள்ளது.
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வருவதையொட்டி அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் பாசனத்துக்கு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X