search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே வீட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    மதுரை அருகே வீட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை-பணம் கொள்ளை

    மதுரை அருகே வீட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள அம்பலத்தடியை சேர்ந்தவர் மொக்கச்சாமி. இவர் மதுரை சிக்கந்தர்சாவடியில் தனது மகனுக்கு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீடு கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்த அவரது சகோதரர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்து பார்த்த மொக்கச்சாமி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.

    பீரோவில் இருந்து 19 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன்மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். #tamilnews
    Next Story
    ×