search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    ராமேசுவரத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

    ராமேசுவரத்தில் வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் ராமதீர்த்தம், வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 51). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று பாண்டி தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இன்று காலை வீடு திரும்பிய பாண்டி கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகளும் சேகரிக்கப்பட்டன.

    கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×