என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
Byமாலை மலர்10 Jun 2018 8:24 PM GMT (Updated: 10 Jun 2018 8:24 PM GMT)
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் நன்றாக பெய்தது. சில மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அது கர்நாடகம், கேரளா முழுவதும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு பற்றிய விவரம் வருமாறு:-
சின்னகல்லாறு 19 செ.மீ., வால்பாறை 17 செ.மீ., பாபநாசம் 12 செ.மீ., பெரியாறு 9 செ.மீ., தேவலா 7 செ.மீ., கூடலூர் பஜார், குந்தாபாலம் தலா 6 செ.மீ., பேச்சிப்பாறை, பொள்ளாச்சி தலா 5 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டை, மைலாடி, குளச்சல் தலா 4 செ.மீ., ஊட்டி, நாகர்கோவில், மணிமுத்தாறு, தென்காசி, தக்கலை தலா 3 செ.மீ., குழித்துறை, ராதாபுரம், கன்னியாகுமரி, இரணியல் தலா 2 செ.மீ., ஆயிக்குடி, பூதப்பாண்டி, கேத்தி, கூடலூர், அம்பாசமுத்திரம், பெண்ணாகரம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை சில மாவட்டங்களில் நன்றாக பெய்தது. சில மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அது கர்நாடகம், கேரளா முழுவதும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு பற்றிய விவரம் வருமாறு:-
சின்னகல்லாறு 19 செ.மீ., வால்பாறை 17 செ.மீ., பாபநாசம் 12 செ.மீ., பெரியாறு 9 செ.மீ., தேவலா 7 செ.மீ., கூடலூர் பஜார், குந்தாபாலம் தலா 6 செ.மீ., பேச்சிப்பாறை, பொள்ளாச்சி தலா 5 செ.மீ., நடுவட்டம், செங்கோட்டை, மைலாடி, குளச்சல் தலா 4 செ.மீ., ஊட்டி, நாகர்கோவில், மணிமுத்தாறு, தென்காசி, தக்கலை தலா 3 செ.மீ., குழித்துறை, ராதாபுரம், கன்னியாகுமரி, இரணியல் தலா 2 செ.மீ., ஆயிக்குடி, பூதப்பாண்டி, கேத்தி, கூடலூர், அம்பாசமுத்திரம், பெண்ணாகரம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X