search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் வி‌ஷம் குடித்து டாக்டர் தற்கொலை
    X

    மானாமதுரையில் வி‌ஷம் குடித்து டாக்டர் தற்கொலை

    மானாமதுரை வி‌ஷம் குடித்து டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில்வே காலனியைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் சிவநாதன் (வயது 22). சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் இவர், தற்போது சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார்.

    2 நாள் விடுமுறை என்பதால் சிவநாதன் மானாமதுரை வந்தார். நேற்று இரவு வீட்டில் தூங்கிய அவர், இன்று காலை எழுந்து வராததால் பெற்றோர் சென்று பார்த்தனர்.

    அப்போது சிவநாதன் அங்கு மயங்கி கிடந்தார். அவரை மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, வி‌ஷம் குடித்திருப்பது தெரியவந்தது.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவநாதன் பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×