search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே விவசாயி அடித்து கொலை: மகன் போலீசில் சரண்
    X

    பல்லடம் அருகே விவசாயி அடித்து கொலை: மகன் போலீசில் சரண்

    பல்லடம் அருகே விவசாயியை அடித்து கொன்ற மகன் போலீசில் சரண் அடைந்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மேற்கு ராசா கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம் (65). விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இதில் காய்கறிகள், கீரைகள் பயிரிட்டு விற்பனை செய்து வந்தார்.இவரது மகன் முருகேசன்.

    விசைத்தறி கூடம் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விசைத்தறி ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.முருகேசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டின் அருகில் தனித்குடித்தனம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு விவசாயி அருணாசலம் தனது வீட்டின் முன் உட்கார்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசன் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசன் விசைத்தறிக்கு பயன்படுத்தும் மரக் கட்டையால் தனது தந்தை அருணாசலம் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வந்த அருணாசலம் மனைவி கணவரை வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

    சிறிது நேரத்தில் அருணாசலம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அருண £சலத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தந்தை இறந்த தகவல் கிடைத்ததும் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அவர் பல்லடம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×