search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

    குளித்தலை அருகே 6-ம்வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை கொட்டாம் பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 21). இவர் தோகைமலை பகுதியை சேர்ந்த 10 வயதான 6-ம்வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

    இதனை அச்சிறுமி அழுதுகொண்டு பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தோகைமலை போலீசில் புகார் செய்தனர். 

    அதன்பேரில் போலீசார் மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×