search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே வாலிபர் மீது தாக்குதல்
    X

    பாபநாசம் அருகே வாலிபர் மீது தாக்குதல்

    பாபநாசம் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேஸ்வா அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் மகன் சண்முகம் (வயது 27), பாபநாசம் சின்னக்கடைத்தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் மகன் ரவிச்சந்திரன்(26) இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

    இந்நிலையில் சண்முகமும், அவரது நண்பர் பிரவீனும் சேர்ந்து ரவிச்சந்திரனை கட்டையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றி ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்கு பதிவு செய்து சண்முகம், பிரவீன் இருவரையும் தேடிவருகிறார்.

    Next Story
    ×