search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் கார் மோதி மீன் வியாபாரி பலி
    X

    கிருஷ்ணகிரியில் கார் மோதி மீன் வியாபாரி பலி

    கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்ற மீன் வியாபாரி மீது கார் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் சையத்மக்பூல் (வயது 72). மீன் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லாண்டி நகர் என்ற இடத்தில் நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த சையத் மக்பூல் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×