search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே இறால் குட்டையை மூடக்கோரி நாளை உண்ணாவிரதம்: வி.சி.கட்சி அறிவிப்பு
    X

    சீர்காழி அருகே இறால் குட்டையை மூடக்கோரி நாளை உண்ணாவிரதம்: வி.சி.கட்சி அறிவிப்பு

    சீர்காழி அருகே மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த கீராநல்லூர் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இறால் குட்டைகளை அப்புறப்படுத்தக்கோரி நாளை (7-ந்தேதி)முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சீர்காழி வட்டம் திருக்கருக்காவூர் ஊராட்சி கீராநல்லூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு அனுமதியின்றி தனியார் ஒருவர் இறால் குட்டை அமைத்து வருகிறார். ஏற்கனவே நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிதண்ணீர் உப்புநீராக மாறியுள்ளதால் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சுமார் 2 கி.மீ. தூரம் சென்று குடிநீர் குடங்களில் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்த சூழ்நிலையில் இறால் குட்டைகள் அமைப்பதினால் சுமார் 2கி.மீ தூரத்தில் கிடைக்க கூடிய தண்ணீரும் உப்பு நீராக மாறி பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகி விடும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிப்பதற்கும்,மற்ற தேவைகளுக்கும் குடிநீர் வழங்கவேண்டும் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் மயிலாடுதுறை சப்-கலெக்டரிடம் மனு அளித்து தீர்விற்காக காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில் அனுமதியின்றி இறால் குட்டைகள் அமைக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நாளை கிராமத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×