search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றும், நாளையும் சென்ட்ரல்-ஆவடி, கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
    X

    இன்றும், நாளையும் சென்ட்ரல்-ஆவடி, கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருசில ரெயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

    ரெயில் (எண்.66051) மூர் மார்க்கெட்டில் இருந்து பகல் 2.05 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு பகல் 2.50 மணிக்கு புறப்படும் (எண்.66052) மின்சார ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மூர் மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் மின்சார ரெயில் (எண். 42001) கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் எண்.42002 மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும்.

    மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய மின்சார ரெயில் பொன்னேரி -கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மூர்மார்க்கெட் -பொன்னேரி இடையே இயக்கப்படும். இன்று ஒருநாள் மட்டும் இந்த 2 மின்சார ரெயில்கள் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய மின்சார ரெயில் (எண்.42004) கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே நாளை (7-ந்தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் பொன்னேரி- சென்ட்ரல் மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும்.

    சென்ட்ரலில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லக் கூடிய பினாசினி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். நெல்லூரில் இருந்து காலை 10 மணிக்கு சூலூர்பேட்டை புறப்படக் கூடிய மின்சார ரெயில் (66030) 1½ மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.

    சூலூர்பேட்டையில் பகல் 12 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் (66026) 1½ மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு புறப்படும்.

    மேற்கண்ட 3 ரெயில்களும் இன்றும், நாளையும் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும்.

    விஜயவாடா- சென்னை பிளாகினி எக்ஸ்பிரஸ், தானாபூர்- கே.எஸ்.ஆர். பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், சாப்ரா- சென்ட்ரல் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும், நாளையும் தாமதமாக வந்து செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #ElectricTrain
    Next Story
    ×