search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையை கலங்கடிக்கும் கரன்சி விவகாரம் - 60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 நோட்டு பறிமுதல்
    X

    கோவையை கலங்கடிக்கும் கரன்சி விவகாரம் - 60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 நோட்டு பறிமுதல்

    கோயம்புத்தூரில் ரூ.1 கோடி மதிப்பிலான கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் பிடிபட்ட சில நாட்களிலேயே இன்று ரூ.60 லட்சம் மதிப்புடைய பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் குடோன் அமைத்து கள்ளநோட்டு அச்சடித்து சமீபத்தில் அக்கும்பல் போலீசில் சிக்கிய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நாமக்கலில் இருந்து வருவதாக கூறி வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துள்ளார்.

    நீண்ட நாட்களாக வீடு பூட்டியிருந்த நிலையில், அவர்கள் திரும்பி வராததால் குடியிருப்பு வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து வீட்டை சோதனையிட்டதில், ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக கிடந்துள்ளன.

    பழைய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×